மராட்டிய மாநிலத்தில் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என தவறுதலாக நினைத்து 4 சாமியார்களை கிராமத்தை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 சாமியார்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி செல்கையில் இவர்கள் கர்நாடகவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அவர்கள் மராட்டிய மாநிலத்தில் சங்கிலி மாவட்டத்துக்கு சென்ற போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். அந்த சமயத்தில், பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என நினைத்த கிராம மக்கள் சாமியார்களை அடித்து உதைத்து அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சாமியார்களை தாக்கிய காணொளி வெளிவந்துள்ளதால், இதை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 Sadhus from Mathura, who were going to Pandharpur on pilgrimage were beaten by a mob in Sangli, Maharashtra. This whole region is where missionaries & mullas have converted villages after villages. Who had Imagined that one day Sadhus can’t even walk on the streets in Bharat? pic.twitter.com/ZMn3HvRBLO
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) September 14, 2022