மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமடைந்த நபரை புல்டோஸரைப் பயன்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மகேஷ் பர்மன் என்ற நபர் பலத்த காயமடைந்தார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால், அங்கிருந்த புஷ்பேந்திர விஸ்வகர்மா என்ற நபர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து விட்டு, பிறகு அவரை புல்டோஸரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தகவல் தெரிவித்தும், அரை மணி நேரத்துக்கு மேலாகியும், ஆம்புலன்ஸ் வராதா காரணத்தினால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடிப்பட்ட அவரை புல்டோஸரில் ஏற்றிச் செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
साइकिल, ठेले, कंधे के बाद अब मरीज सीधे जेसीबी में! कटनी का मामला है लोगों का कहना है कि एंबुलेंस सेवा को कॉल किया था लेकिन मिली नहीं. @ndtv @ndtvindia pic.twitter.com/CfxRlNfXEM
— Anurag Dwary (@Anurag_Dwary) September 13, 2022