Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்வீட்டில் மீன் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்காக இதோ!

    வீட்டில் மீன் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்காக இதோ!

    வீட்டில் மீன் தொட்டி வைத்து அதனை ஆசை ஆசையாய் வளர்த்து வரும் நபரா நீங்கள்..? கலர் கலர் மீன்களை தொட்டியில் வைத்து வளர்ப்பது நம் வீட்டிற்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல், மீனின் அசைவுகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். அமைதியை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உணவு நிலையம், சூப்பர் மார்கெட், வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் இடங்கள், துணிக்கடை, ரெடிமேட் கடை போன்றவற்றில் வைக்கலாம். பழ வகைகள் விற்கும் கடை, காய்கறி விற்கும் இடங்களில் வைப்பதால் வியாபாரம் பெருகும்.

    வீட்டில் மீன் தொட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
    • மீன்கள் வீட்டின் நிதி நிலைமையை சரியாக வைத்து செல்வத்தை ஈர்க்கின்றன.
    • மீன் வளர்ப்பு ஒரு அமைதியான சூழ்நிலையை உங்கள் வீட்டில் உருவாக்கின்றன.
    • மீன் தொட்டிகள் வெற்றி மற்றும் நல்லிணக்கத்திற்கு முக்கியமாக கருதப்படுகின்றன.
    • மீன்கள் வாழ்வாதாரத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன. எனவே, தொட்டியில் நகரும் ஒரு மீன் நேர்மறை அதிர்வுகளை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.
    • வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையின் நேர்மறையான அதிர்வை மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மீன்கள் ஈர்க்கிறது.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மீன் தொட்டியை எங்கு வைக்க வேண்டும்..? எந்த திசையில் வைக்க வேண்டும்..அப்படி வைத்தால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வீட்டிற்குள் நுழையும் போது, இடது பக்கமாக மீன் தொட்டி இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு திசையில் மீன் தொட்டி வைத்தால் – அன்பு அதிகரிக்கும்.

    வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால், மீன் தொட்டியில் கண்டிப்பாக 9 மீன்களாவது இருக்க வேண்டும். 9 மீன்களுக்கு குறைவாக மீன் வளர்க்க கூடாது.

    ஒருவர் படுக்கையறை அல்லது சமையலறையில் மீன்தொட்டியை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வீட்டின் குடியிருப்பாளர்களுக்கு தூக்கம் அல்லது உணவு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    மீன்களின் நிறம்:

    மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.

    மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.

    மீன் வளர்ப்பிற்கான வாஸ்து குறிப்புகள்:

    சுறுசுறுப்பாக இருக்கும் மீன்களைத் தேர்ந்தெடுத்து தொட்டியில் விடவும். இது ஆற்றலின் சீரான ஓட்டத்தை உறுதி செய்யும். தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை ஒன்பது இருக்க வேண்டும், அவற்றில் எட்டு டிராகன் மீன் அல்லது தங்கமீன்கள் மற்றும் ஒரு கருப்பு மீனாக இருக்க வேண்டும்.

    தொட்டியை அல்லது கிண்ணத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். தொட்டியை பராமரிக்க தேவையான வடிகட்டிகள், காற்றோட்டம் மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றை நிறுவவும்.

    ஒரு பெரிய மீன் தொட்டியைத் தேர்வுசெய்க, இதனால் அனைத்து மீன்களும் சுற்றுவதற்கு போதுமான இடம் இருக்கும். கண்ணாடி அல்லது அக்ரிலிக் செய்யப்பட்ட தொட்டிகளை விரும்புங்கள்.

    ஒரு மீன் உங்கள் வீட்டை அனைத்து தீமைகளிலிருந்தும் விடுவிக்கிறது. உங்கள் மீன்களில் ஒன்று இறந்துவிட்டால் வருத்தப்பட வேண்டாம், ஏனெனில் இது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இருப்பினும், விரைவில் மீன்களை மாற்றவும்.

    மீன் தொட்டியை பராமரிக்கும் முறை :

    தொட்டியின் தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-20 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை மாற்ற ஒரு மாத காலம் கூட காத்திருக்கலாம். தண்ணீரில் உருவாகும் பாக்டீரியா மீன்களை உயிர் வாழச் செய்யும். அதனால் தண்ணீரை முழுமையாக மாற்றினால், அது மீன்களுக்கு ஆபத்தாய் போய் முடியும்.

    நீங்கள் புதிதாக மீன் வளர்க்க போறிங்களா? அப்போ கண்டிப்பாக சின்ன தொட்டியை தேர்ந்தெடுக்க கூடாது. சின்ன தொட்டிகளை பராமரிப்பது கடிமானதாகும். இதுவே பெரிய தொட்டி என்றால் பராமரிப்பது சுலபமாகும். மீனின் ஆயுட்காலமும் நீடிக்கும்.

    மீன்களை, முக்கியமாக தங்க மீன்களை பௌலில் போடவே கூடாது. அதிஆரோக்கியமான மீன் தொட்டி வைத்திருப்பது சுலபம். தேவையானது எல்லாம் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். இதனால் மீன்கள் அதன் போக்கில் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகவே தண்ணீர் நல்ல நிலையில் இருந்தாலே போதும், வேறு எதுவுமே தேவையில்லை.

    குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; அரசு மருத்துவமனை மீது புகார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....