Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்உடல் நலனுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது; இதையும் செய்யனுமாம் மக்களே!

    உடல் நலனுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது; இதையும் செய்யனுமாம் மக்களே!

    அளவான உணவு ஆரோக்கியமான வாழ்வு. அந்த அளவு மீறினால் ஆபத்துதான். அதிகம் உண்பது, பசி அதிகம் எடுத்த பின்பு உண்பது, நேரம் கடந்து உண்பது, எண்ணெய் பலகாரங்கள், கடை தீனி, இறைச்சி உணவுகள் இவைகள் செரிமானப் பிரச்சனைக்கு விதி விலக்காக உள்ளன. நம்மில் பலர் செரிமானப் பிரச்சனையை கண்டு கவலை கொள்கிறோம். இதற்கு என்னதான் தீர்வு?

    நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகும்போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன. சில இயற்கை உணவுகளை நாம் சாப்பிடும் உணவோடு சேர்த்துக்கொண்டாலே போதும்… இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட்டுவிடலாம். செரிமானம் எளிதாக, இயற்கை உணவுகளையும் அவற்றின் மருத்துவப் பலன்களையும் பார்ப்போம்…

    நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் பைல் திரவம் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.

    செரிமானத்திற்குப் பிறகான உடற்பயிற்சி:

    இன்றைய அவசர வாழ்க்கை முறையில், யாருக்கும் தங்களுக்கென செலவிட நேரமில்லை. இது அவர்களது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனினும், உடல் ஆரோக்கியமாக இருக்க உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான மக்கள் உணவு உண்ட உடனேயே வேலை செய்ய தொடங்கி விடுகிறார்கள், அல்லது தூங்கச் சென்று விடுகிறார்கள். இதனால் உணவு ஜீரணமாவதில் பிரச்சனை ஏற்படுகின்றது.

    இதனால் உடலின் செரிமான அமைப்பு பலவீனமடையத் தொடங்குகிறது. ஆகையால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உணவு உண்ட பிறகு, கண்டிப்பாக உங்களுக்கென 20 நிமிடங்கள் ஒதுக்க வெண்டியது மிக முக்கியமாகும். இந்த நேரத்தில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். உங்களை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

    சாப்பிட்டதும் படுக்கக் கூடாது :

    சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

    நடைப்பயிற்சி:

    நடைப்பயிற்சி ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதன் மூலம் நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதனால்தான் உணவு உண்ட பிறகு எப்போதும் நடப்பது நல்லது என கூறப்படுகின்றது. உணவு உண்ட பிறகு நடப்பது உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது.

    செரிமான அமைப்பில் அதிக அழுத்தம் ஏற்படுவதில்லை. அதே சமயம், உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்தால் வாயுப் பிரச்சனை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆகையால் தினமும் உணவு உண்ட பிறகு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    வஜ்ராசனம்:

    உணவை சாப்பிட்ட பிறகு, நீங்கள் அட்மிண்டைன் போஸிலும் உட்காரலாம். அட்மிண்டின் போஸில் அமர்ந்தால் உணவு எளிதில் ஜீரணமாகும். உணவுக்குப் பிறகு இதுவே சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது.

    சுகாசனம்:

    சுகாசனத்தில் அமர்ந்தாலும் உணவை எளிதாக ஜீரணிக்க முடியும். ஆனால் சாப்பிட்ட பிறகு சுகாசனில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அமர வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இது தவிர வயிறு சம்பந்தமான நோய்களில் இருந்தும் நிவாரணம் காணலாம்.

    மேலும் சில குறிப்புகள்:
    உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்:

    உணவை நன்கு மென்று சாப்பிட்டாலே செரிமான பிரச்சனை ஏற்படாது. பல பேர் உணவை அப்படியே விழுங்குவதனால் தான் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    கல்லீரல் பத்திரம்:

    கல்லீரலை பாதிக்காத உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. கேரட், பீட்ரூட், பச்சை காய்கறிகள் உண்பது நன்மை விளைக்கும். மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

    தண்ணீர் :

    அதிகமாக தண்ணீர் பருகுவது உங்களது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ளும். குறைந்தது ஒரு நாளுக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.

    தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சாலச் சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவில் சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது. மேலும், வயிறு இலகுத் தன்மையை அடையும், வயிறு உப்பசம் குறையும்.

    அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.

    தன்பாலின திருமணத்திற்காக இலங்கை சென்ற தமிழ்ப்பெண்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....