ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், நில அளவையாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் இணையதளத்தின் வாயிலாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வாணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு