மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் முடிவுபெற்ற நிலையில், ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்துக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும், இருபது ஓவர் தொடர் ஜுலை 29 அன்றும் தொடங்குகிறது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிசந்திர அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் தங்களின் உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேற்கிந்திந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்குபெறும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா தொற்று