Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்காற்றின் தூய்மையையும் இனி மொபைல் மூலம் அறியலாம்! இதுதான் அப்டேட்!

    காற்றின் தூய்மையையும் இனி மொபைல் மூலம் அறியலாம்! இதுதான் அப்டேட்!

    வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில், அனைத்துமே உள்ளங்கையில் வந்துவிட்டது‌. தொழில்நுட்பத்தின் மூலம், நமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. இதில் முக்கியமானது தான் கூகுள் மேப். சேர வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் நடுவீதியில் விற்பவர்களுக்கு, மிக எளிதாக வழியைக் காட்டுகிறது கூகுள் மேப். இதில் மேலும் ஒரு கூடுதல் அம்சமாக காற்றின் தரத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    பயணிக்கும் வழியில் உள்ள காற்றின் தரத்தையும், தன்மையையும் குறித்து கணக்கிட்டு சொல்லும் புதிய சேவையானது கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

    கூகுள் மேப் என்பது, கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வழிகாட்டும் செயலியாகும். இந்த செயலியானது, நிலப்படங்களை மிகவும் துல்லியமாக காட்டி வழி தேடுபவர்களுக்கு, உற்ற தோழனாக விளங்குகிறது. உலகம் அனைத்தையும் ஒரு செயலியில் பார்க்க முடியும் எனில், அது கூகுள் மேப்பில் மட்டுமே சாத்தியம். இந்த காரணத்திற்காகவே உலகம் முழுவதும் கூகுள் மேப்பின் தேவையானது, அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது.

    கூகுள் மேப் வசதி வந்த பிறகு, மக்கள் உள்ளூர் வாசிகளிடம் விலாசம் கேட்பது குறைந்து விட்டது. ஊர்ப் பெயர் தெரியாத பகுதிகளுக்கு கூட மிக எளிதாக சென்று வர முடியும் என்றால், அதற்கு கூகுள் மேப்பின் மேம்பட்ட சேவைகள் தான் காரணமாக உள்ளது.

    பல சேவைகளைத் தனது செயலி மூலம் வழங்கி வந்தாலும், அவ்வப்போது புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது கூகுள் நிறுவனம். பொதுமக்களுக்கு இன்னமும் சிறப்பான சேவையை வழங்கவே பல அப்டேட்களை வழங்கி வருகிறது கூகுள் மேப்.

    இந்த வகையில் புதிய வசதி ஒன்றினை கூகுள் மேப் அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது நாம் செல்லும் வழியில் உள்ள காற்றின் தரம் மற்றும் தன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், புதிய வசதியை கூகுள் மேப் நிறுவனம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக, காற்றின் தூய்மை மற்றும் பனிப்படலம் உருவாகியுள்ள பகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், புதிய அப்டேட் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசதியானது, தற்போது பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களில் இந்த புதிய வசதிக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது வெற்றி பெற்று விட்டால், உலக நாடுகள் அனைத்திலும் இந்த புதிய வசதியை கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பெய்த கனமழை!! உற்சாகத்தில் சென்னைவாசிகள்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....