புதுச்சேரியில் காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 31 ஆயிரத்து 800 ரூபாய் சூதாட்ட பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் திருபுவனை மதகடிப்பட்டு புதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது அங்கு காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ஆனந்தன்(45), ராஜி (32), வீரமணி (40), ஜெயமணி (35), ஆறுமுகம் (30) மற்றும் கரையாம்புத்தூரை சேர்ந்த அய்யப்பன் (44), தமிழக பகுதியான மாத்தூரை சேர்ந்த பாஸ்கர் (47) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப்பணம் 31 ஆயிரத்து 800 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்திய இளம் பெண்களுக்கு நேர்ந்த சோகம்! திருப்பூரில் நடந்தேறும் அவலம்