Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்நிலவில் விவசாயம் செய்ய நினைக்கும் ஆய்வாளர்கள்; இது சாத்தியமா?

    நிலவில் விவசாயம் செய்ய நினைக்கும் ஆய்வாளர்கள்; இது சாத்தியமா?

    நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் சென்று தற்போது நிலாவுக்கே சென்று சோறு சாப்பிடும் அளவிற்கு இன்றைய விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. 

    வாஷிங்டன், மனிதன் நிலாவில் காலடி வைத்து சரித்திரம் படைத்து சுமார் 49 வருடங்கள் முடிந்துவிட்டது. இருப்பினும், இதுவரையில் நிலாவில் குடியிருப்புகளை நிறுவும் மனிதனின் ஆசை மட்டும் இதுவரை நிறைவேறாமல் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அந்த ஆசையை நிறைவேற்ற மிகப்பெரிய ஆயுதமான முயற்சியை மட்டும் கைவிடாமல் இதுவரை நிலாவுக்கு பல விண்கலங்களை செலுத்தியுள்ளனர். பல்வேறு வகையான ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர். 

    நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் சென்று தற்போது நிலாவுக்கே சென்று சோறு சாப்பிடும் காலம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது. 

    இதையும் படிங்க:இன்று முதல் தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி..உற்சாகத்தில் ரசிகர்கள்!

    2024 ஆம் ஆண்டிலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே நிலாவில் தாவரங்களை வளர்க்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

    இஸ்ரேலின் பெரேஷீட் 2 விண்கலம் மூலம் விதைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தாவர உயிரியலாளர் பிரட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 

    நிலவில் விதைகள் தரையிறக்கப்பட்டதும் சீல் செய்யப்பட்ட அறைக்குள் அவை வளர்க்கப்பட உள்ளன. நிலவில் நிலவும் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு விதைகள் தேர்வு செய்யப்பட உள்ளன. 

    இதனிடையே, இந்தத் திட்டம் உணவு, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதற்கான ஆரம்ப நிலை தான் எனவும், நிலவில் மனிதன் தன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான முதல் முயற்சி இதுவென்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இது அறிவியல் பிரியர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....