அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
முன்னாள் அமெரிக்க அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா மேரி ட்ரம்ப். இவருக்கு வயது 73. டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இவானா மேரிக்கும் இவான்கா ட்ரம்ப், ஜூனியர் ட்ரம்ப, எரிக் ட்ரம்ப் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவானா ட்ரம்ப் இறந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது:
நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இவானா காலமானார். அவர் அற்புதமான அழகான பெண். அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அவருடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவருடைய மூன்று குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவாங்கா, எரிக் தான்.
நாங்கள் அனைவரும் அவரை பற்றி பெருமைப்பட்டத்தை போல, இவானா தனது பிள்ளைகள் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். இவானாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார். இவானா ஒரு தொழிலதிபர் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மீது பதவி நீக்க தீர்மானம்