Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்பணம் வீட்டில் தங்க வேண்டும் என்றால் இதையெல்லாம் மறக்காமல் !

    பணம் வீட்டில் தங்க வேண்டும் என்றால் இதையெல்லாம் மறக்காமல் !

    ஒரு பக்கம் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் ஈட்டிய செல்வத்தை காக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நம்மிடம் இருக்கும். செல்வம் ஈட்டுவதை விட, ஈட்டிய செல்வத்தை பாதுகாப்பதுதான் கடினமான காரியமாக இருக்கும்.

    செல்வம் நம்மிடம் நிலைக்க வேண்டுமென்றால் மகாலக்ஷ்மியின் அருள் நமக்கு வேண்டும். இல்லையென்றால் ஈட்டிய செல்வம் எல்லாம் தேவையற்ற வழிகளில் கரைந்துவிடும்.

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒவ்வொருவரும் நல்ல வழிகளை கடைப்பிடிப்பதில் சில சூட்சமங்கள் இருக்கிறது.

    மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக கூறப்படும் இடங்கள் எவை? என்று இப்பதிவில் நாம் காணலாம்…
    • நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம், பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவார்கள்.
    • சுமங்கலி பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் இடுவதால் சகல வளங்களும் வீட்டில் நிலைத்து நிற்கும். குங்குமம் இடாமல் யாருக்கும் எந்த தானமும் அளிக்கக்கூடாது. அது தரித்திரத்தை உண்டாக்கும். ஒருவருக்கு நீங்கள் தானம் வழங்க வேண்டுமென்றால் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறீர்களா என்று ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.
    • விளக்கின் தீப ஜோதியில் வாசம் செய்யும் லட்சுமி தேவி. சுடர் விட்டு எரியும் தீபமானது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. விளக்கு இல்லாமல் பூஜையும் இல்லை. புனஸ்காரமும் இல்லை. ஜோதி இல்லாமல் இறையும் இல்லை. இறைவனும் இல்லை. ஜோதி வடிவமே இறை ரூபம். எனவே வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.
    • கோமாதாவின் பின்புறம் லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. அதனால் தான் கோமாதாவை வணங்கும் போது பின்புறம் தொட்டு வணங்குகிறார்கள். இனி பசுவை காணும் பொழுது பின்புறம் தொட்டு வணங்கி விடுங்கள். லட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.
    • துளசி செடியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். சாமந்திப் பூ, தாழம்பூ, தாமரை மலர் கொண்டும் லட்சுமியை அர்ச்சிக்கலாம். வில்வ மரத்தை வலம் வந்து வழிபடுவது லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும்.
    வில்வ பத்திரம், நெற்றிப் பகுதி…
    • வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்களின் வடிவம். இப்படிப்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே, லட்சுமியின் சொரூபமாக விளங்குகிறது என்கிறது புராணம்.
    • நமது உள்ளங்கையில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? காலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையை பார்த்துவிட்டு தான் விழிக்க வேண்டும் என்பது காலம் காலமாக கூறப்படும் ஒரு தகவலாகும். அதன் உள்நோக்கம் மகாலட்சுமி உள்ளங்கையில் வாசம் செய்வது தான். எனவே இனிமேல் காலையில் எழுந்ததும் உங்களின் முதல் பார்வை உங்களது உள்ளங்கையில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    • குதிரை மற்றும் யானையின் நெற்றிப் பகுதியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. மன்னர் காலத்தில் மன்னர்களின் படை களத்தில் ஏதேனும் ஒரு குதிரையோ, யானையோ மரணிக்க நேர்ந்தால் அது மன்னருக்கு வரும் ஆபத்தை உணர்த்துவதாக கொண்டனர். தெய்வாம்சம் பொருந்திய இந்த இரு உயிரினங்களையும் காப்பது நமது கடமையாகும்.
    • பாற்கடலில் உருவான மஹாலக்ஷ்மி கடலில் இருக்கும் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே உப்பிற்கும் லக்ஷ்மி தேவியின் சக்தி உண்டு. உப்பை வைத்து பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. எப்போதும் வீட்டில் கல் உப்பை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
    • அரிசி, உப்பு மற்றும் தானியங்கள் இவற்றை முழுவதுமாக எப்போதும் துடைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருள் உங்களுக்கு கிட்டும்.
    • தனம் என்று கூறப்படும் செல்வத்திற்கு குறி பொருளாக விளங்குவது நாணயங்கள். எனவே பணத்தை அலட்சியமாக எண்ணாமல் அதற்கு உரிய மரியாதை தருவது நல்லது. பணத்தை எண்ணும் பொழுது எச்சில் தொட்டு எண்ணுவது தவறான ஒரு செயல் ஆகும். அது லக்ஷ்மியை அவமதிப்பது போன்றதாகும்.
    • அதுபோல் வீட்டில் ஆங்காங்கே நாணயங்களை சேகரித்து வைப்பது வளம் பெருக வழி வகுக்கும். ஒரு சிலர் ஒரு ரூபாய் நாணயம் கூட விட்டு வைக்காமல் துடைத்து வைத்து விடுவார். அதுபோல் செய்யக்கூடாது. உங்களுக்கே தெரியாமல் ஆங்காங்கே சில்லறைகளையும், பண நோட்டுகளையும் சேகரித்து வைப்பது நல்லது.

    மரண பயம் என்பது எந்த அளவிற்கு உண்மை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....