Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்மரண பயம் என்பது எந்த அளவிற்கு உண்மை?

    மரண பயம் என்பது எந்த அளவிற்கு உண்மை?

    அமைதியான ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டாலோ அல்லது ஒரு பூனை நமது மேல் வந்து விழுந்தாலோ நமது உடல் ஒரு பதட்ட நிலைக்குச் செல்லும். நமது இதயத்துடிப்பும் பல மடங்கு அதிகரித்திருப்பதை அந்த நேரத்தில் நம்மால் உணர முடியும்.

    நள்ளிரவு நேரத்தில் ஒரு திகில் படத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென படத்தில் தோன்றும் பயங்கர காட்சிகளைப் பார்த்து நாம் அலறுவது மட்டுமில்லாமால், நமது உடலானது ஒரு பதட்ட நிலைக்கு செல்வதை நாம் உணர முடியும்.

    குறிப்பிட்ட ஒரு காரியத்தில் மூழ்கி இருக்கும் போது நமது நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ திடீரென நம்மை பயமுறுத்தும் போது, நம்மையும் மீறி நமது இதயத் துடிப்பானது அதிகரிப்பதினை நாம் அந்த நேரத்தில் உணர முடியும்.

    ஒரு கோரமான விபத்து நேரவிருக்கும் தருணத்தில் கடைசி நொடியிலிருந்து அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் போது நமது இதயம் அதிகம் துடிப்பதினை நம் உணர்ந்திருப்போம்.

    மேற்கூறிய நிகழ்ச்சிகளை நமது வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பின் அதனை நாம் விவரிக்கும் போது உபயோகப்படுத்தும் வார்த்தை ‘மரண பயமாய்’ இருந்தது என்பதே..

    அது எப்படி??! உயிருடன் இருக்கும் ஒருவர், உண்மையில் மரணம் எப்படி இருக்கும் என்று உணர முடியுமா?? மரண பயம் என்கிற வார்த்தை எந்தளவுக்கு உண்மை??

    மரண பயம்..

    மனிதர்களால் மரண பயத்தினை உண்மையில் உணர முடியுமா?? என்ற கேள்விக்கு ஆம் என்றே பதில் தருகிறது நமது விஞ்ஞானம்.

    மேற்கூறிய தருணங்களின் போது நமது உடலில் ஏற்படும் வலிமையான வேதியியல் மாற்றமானது நம்மை இறப்பிற்கு அருகில் அழைத்துச் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய ‘மரண பயம்’ அரிதாகவே ஏற்படுகிறது என்றாலும், எவரொருவருக்கும் ஏற்படலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

    மிகவும் அதிகமாக அதாவது ‘மரண பயம் ஏற்படும் போது’ நமது உடலிலுள்ள தனியங்கி நரம்பு மண்டலமானது அதிகமாக பாதிக்கப்படுகிறது.

    பயத்தின் மூலம் ஏற்படும் மரணமானது முதலில் நமது நரம்பு மண்டலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.

    குறுகிய சமயத்தில் ஏற்படும் அதீத பயத்தினால் நமது உடல் உடனடியாக ஒரு எதிர்வினையை உருவாக்குவதற்க்காக அதிக அளவு வேலை செய்கிறது.

    மிகக் குறுகிய நேரத்தில் எதிர்வினைகள் எடுக்கும் நேரத்தில் நமது இதயத் துடிப்பானது அதிகரிப்பதுடன், பதட்டமும், அதிக அளவு வியர்வை சுரப்பும், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தலும் ஏற்படுகிறது.

    குறுகிய நேரத்தில் எடுக்கப்படும் இந்த எதிர்வினைகள் நம்மை எப்படி மரணத்திற்கு கூட்டிச்செல்கின்றன??

    பதட்டமான தருணங்களின் போது நமது நரம்பு மண்டலம் முதல் வேலையாக ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்ஸ் ‘அட்ரீனலின்’ஆகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வேதியல் கடத்தியாகவோ இருக்கலாம்..

    இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலினை அடுத்த முடிவினை நோக்கி தள்ளுவதற்கு உதவி புரிகின்றன. இதில் பிரச்சனை என்னவெனில்..அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் இந்த ஹார்மோன்கள் நமது உடலுக்கு நல்லது இல்லை என்பதே..

    அதிலும் முக்கியமாக இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதீத பயத்தினால் ஏற்படும் மரணங்களுக்கு பெரும்பாலும் இந்த ஹார்மோன்களால் இதயத்திற்கு ஏற்படும் சேதம் தான் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில், இதயம் மட்டுமே சேதப்பட்ட உடனே மரணத்தினைத் தருகிறது.

    குறுகிய நேரத்தில் உருவாக்கப்படும் இந்த அதிக அளவு அட்ரீனலினானது, அதிக அளவு கால்சியத்தினை இதயத்திற்கு அனுப்புகிறது. இந்த அதிக அளவு கால்சியத்தினை இதயம் குறைப்பதற்கு போராடுகையில்.. அதன் இதயத் துடிப்பில் மாறுதல் ஏற்படுகிறது (ventricular fibrillation).

    இதயத்துடிப்பின் ஏற்படும் இந்த மாறுதல் ரத்தத்தினை சரியாக அனுப்ப முடியாமல் திணறுவதன் மூலம் உடனடி மரணமானது நிகழ்கிறது. உடனடி சிகிச்சை கொடுக்கப்படாவிடில் இதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது.

    அதிக அளவு அட்ரினலினானது பயத்தின் போது மட்டுமே உற்பத்தி செய்யப்படுவது இல்லை. மற்ற வலிமையான உணர்ச்சிகளின் போதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    விளையாட்டுகளின் போதும், உடற்பயிற்சிகள் செய்யும் போதும் ஏற்படும் இறப்புகள் பெரும்பாலும் இந்த அட்ரினலின் அதிகமாவதால் தான் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீரை எப்போது, எந்த நேரத்தில் குடித்தால் ஆரோக்கியம் பெருகும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....