Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்தூங்காநகரத்தில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் உள்ளனவா?

    தூங்காநகரத்தில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் உள்ளனவா?

    தூங்காநகரம் என்றழைக்கப்படும் மதுரை தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில், தவறவிடக்கூடாத இடமாகும். ஏனெனில் இது நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் கலைப்படைப்புகளின் பழங்கால பிரமாண்ட கோவில்களுக்கு மிகவும் பிரபலமானது. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மதுரை, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

    கிழக்கின் ஏதென்ஸ் என்றும் குறிப்பிடப்படும் மதுரை, இந்திய தீபகற்பத்தில் தொடர்ந்து மக்கள் வசிக்கும் மிகப் பழமையான நகரமாகும், இது கிறிஸ்தவத்திற்கு முந்தைய சங்க காலத்தைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மதுரை பாண்டியப் பேரரசின் ஆட்சி பீடமாக இருந்தது. பெரும்பாலும் தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமாக கருதப்படும் மதுரை, தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் உள்ள பண்டைய மதுரை தென்னிந்தியாவின் மிக அழகிய மற்றும் முக்கியமான கோயிலாகும் – மீனாட்சி கோயில் . ஒரு தென்னிந்திய ஆலயம் மட்டுமே நீங்கள் பார்த்தால், மீனாட்சி கோவில் அது இருக்க வேண்டும். மதுரை நகரம் 4,000 க்கும் மேற்பட்ட வயதுடையது. இது தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய மையமாக உள்ளது.

    நயக் வம்சத்தை ஆண்ட போது, பல அற்புதமான கோயில்களும், அற்புதமான கட்டிடக்கலை கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நடைபெறும் 12 நாள் சித்திரை திருவிழா, கடவுளையும் தேவியையும் மறுசீரமைக்கும் வானுலக திருமணத்தில் இடம்பெறுகிறது.

    இங்கு உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி என்றும் அழைக்கப்படும் மீனாட்சி கோயில், இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை  தலைசிறந்த கட்டிடக்கலைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாட்சியமாக உள்ளது.

    மீனாட்சி கோயிலுடன், திருமலை நாயக்கர் மஹால் & கூடல் அழகர் கோயில் ஆகியவை மதுரையின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டிய மற்ற முக்கிய இடங்களாகும். மேலும், மதுரையின் மல்லிகை புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

    திருமலை நாயக்கர் மஹால் எங்கு இருக்கிறது?

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தெற்கே 1.5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது இந்த அரண்மனை. பேருந்து அல்லது ஆட்டோ மூலம் இந்த இடத்திற்கு நீங்கள் செல்லலாம்.

    திருமலை நாயக்கர் அரண்மனையின் வரலாறு என்ன?

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு நாயக்கர்கள் மதுரை பகுதியை ஆட்சி செய்து வந்தனர். நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணப்பருக்கு மகனாக பிறந்தவர் முத்து வீரப்பர். அவருக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவருடைய இளைய சகோதரர் திருமலை நாயக்கர் மன்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திருச்சியில் இருந்து ஆட்சி செய்வதற்கு பதிலாக மதுரையில் இருந்தே ஆட்சியை நடத்தலாம் என்ற எண்ணம் எழவே அவர் மதுரைக்கு தலைமையகத்தை மாற்றினார்.

    அன்றைய காலத்தில் மதுரை நகரம் முழுவதும் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்களை கட்டி எழுப்பினார், அவர். அதில் குறிப்பிடத்தக்கது தான் இந்த திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் மதுரை அரண்மனை. இந்த அரண்மனை திருமலை நாயக்கரின் வசிப்பிடமாகவும் செயல்பட்டது. இந்த அரண்மனையை திருமலை நாயக்கர் 17ம் நூற்றாண்டில் நிறுவினார். 1629 முதல் 1636ம் ஆண்டு வரை இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றது.

    கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்காக சுண்ணாம்பு, தன்றிக்காய், வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையை மேல்பூச்சாக அரண்மனையை எங்கும் பூசியுள்ளனர். இந்த அரண்மனையில் மொத்தமாக 48 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டு 248 தூண்கள் உள்ளன.

    திராவிட – இஸ்லாமிய கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனையின் உள் அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கும் பெரிய வெள்ளை தூண்கள் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று என்று தான் கூற வேண்டும். இன்று இருக்கும் அரண்மனையை விட நான்கு மடங்கு மிகப் பெரியதாக அமைந்திருந்தது அன்று திருமலை நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்ட அவருடைய அரண்மனை. சுற்றிலும் நந்தவனம், குளம், அந்தப்புரம், தர்பார் என்று மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த கட்டிடம்.

    கட்டிடக் கலைஞர் யார்?

    திராவிட இஸ்லாமிய நுணுக்கங்களுடன் இந்த அரண்மனை வடிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஸ்டக்கோ என்று கூறப்படும் உட்கோபுர வேலைப்பாடு, பெரிய பெரிய தூண்கள் இத்தாலிய கட்டிடக் கலையையே நமக்கு நினைவுப்படுத்துகிறது. இத்தாலியை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவரின் உதவியால் தான் இந்த அரண்மனை வடிவம் பெற்றது. போதுமான வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்த கட்டிடத்தை வடிவமைத்து தந்தவர் யார் என்பது இன்னும் பதில் அறியாத கேள்வியாகவே வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ளது.

    திருமலை நாயக்கர் அரண்மனையின் இன்றையின் நிலை:

    அரண்மனையில் இன்று நடன அரங்கம் ஒன்றும், கல்லெழுத்துக் கலைக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அரண்மனையின் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கும் நடன அரங்கிற்குள் சென்றால், அந்த பகுதி முழுமையாகவும் அரண்மனை பற்றிய பல்வேறு வரலாற்று சான்றுகள் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

    தஞ்சாவூர் சித்திரங்கள், பல்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்ட அரண்மனையின் புகைப்படங்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள் என அனைத்தும் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி உள்ளே செல்லும் போது அங்கே கல்வெட்டுகளும், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஓடுகள், கற்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சுற்றி இருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் புதர் மண்டியிருக்க இந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருள் தான் மண்டிக் கிடக்கிறது. மேலும் சுவர்கள் முழுவதும் பென்சிலாலும், பேனாவாலும் கிறுக்கி வைத்துள்ளனர் பார்வையாளர்கள். ஆங்காங்கே படங்கள், பெயர்களையும் எழுதி வைத்து வரலாற்று சின்னங்களில் தங்களின் வரலாற்றினை பதிக்க முயன்றிருக்கிறனர்.

    சில பகுதிகளில் வெறும் மேடைகள் மட்டுமே இருக்கிறது ஆனால் அங்கே சிலையோ, கல்வெட்டோ இல்லாமல் வெறுமனே உள்ளது. மேலும் பெறப்பட்ட கல்வெட்டுகள் குறித்த வரலாற்று தரவுகளையும் போதுமான அளவில் வைக்கவில்லை என்ற ஆதங்கமும் பார்வையாளர்கள் மத்தியில் எழுகிறது. கல்லெழுத்துக் கலைக்கூடம் செயல்பட்டு வரும் இடத்தில் சுவரெல்லாம் பெயர்ந்து வருகிறது. பூசப்பட்டிருக்கும் வண்ணப்பூச்சு எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு மிகவும் மோசமானதாவும் இருக்கிறது.

    மாலை நேரத்தில் ஒலியும் – ஒளியுமாய் மஹாலின் பெருமைகளை பேசினாலும், இந்த இரண்டு பகுதிகளும் சூரிய வெளிச்சத்திற்காக ஏங்கும் இருள் சூழ்ந்த இடமாகவே காட்சி அளிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். இது போன்ற பலரின் பார்வைக்கும் வெளிச்சத்திற்கும் செல்லாமல் இருப்பது ராமநாதபுர அரண்மனையும், தஞ்சை அரண்மனையும். மைசூர் அரண்மனையைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அரண்மனை தான் நாயக்கர் அரண்மனை. இதை பரமாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே!

    தண்ணீரை எப்போது, எந்த நேரத்தில் குடித்தால் ஆரோக்கியம் பெருகும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....