தேசிய அனல் மின் நிறுவனத்தில் 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்டிபிசி) உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்பு்பு அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தகுதியுடையவர்களிடம் இருந்து இந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ல், மெக்கானிக்கல், இன்ஸ்ஸ்ருமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்களாக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, GATE-2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலேயே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நபருக்கு வயது 27-க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.11.2022-க்குள் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டுமென்று அறிவிப்பு வெளிவந்தது.
இதையும் படிங்க: பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனம்..! சாட்டியடி..! ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயண சுவாரஷ்யங்கள்…