நடிகர் விஷாலின் ட்விட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் விஷால் தனது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் சமீபத்தில் காசிக்கு ஆண்மிக பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், காசிக்கு சென்று வந்ததை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் விஷால் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில், ‘அன்புக்குரிய மோடி அவர்களே, நான் காசிக்குச் சென்று வந்தேன். அங்கு மிகச் சிறந்த தரிசனம் மற்றும் பூஜை கிடைத்தது. மிகப் புனிதமான கங்கை ஆற்றையும் தொடும் பாக்கியம் கிடைத்தது. மிக எளிமையாக எவரும் காசிக்கு செல்லும் வண்ணம், காசி கோயிலை மேம்படுத்தியதற்காக உங்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் சல்யூட்’ என்று தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் பெரும் வைரலானது. விஷாலின் இந்த ட்விட்டிற்கு பல வகையான கருத்துகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், விஷாலின் இந்த பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022
விஷாலின் பதிவை பகிர்ந்து, ‘ உங்களுக்கு காசியில் அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி’ என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்விட் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு: தேசிய அனல் மின் நிறுவனம் அறிவிப்பு