Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு! நாராயணசாமி

    பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு! நாராயணசாமி

    புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சரின் செல்லப்பிள்ளை தொகுதியான தருமபுரியில் உள்ள அரசு பள்ளியையே சீருடை, புத்தகங்கள் வழங்காமல் முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    மேலும் பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி சீருடைகள், இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்தும், அரசு அறிவித்தபடி இலவச சைக்கிள் மற்றும் இலவச மடிக்கணியை வழங்கப்படாததை கண்டித்தும், மேலும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்காத பாஜக கூட்டணி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தருமபுரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே கட்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி பி.சி.சி சிறப்பு அழைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களை அலட்சியப்படுத்தும் மற்றும் வஞ்சிக்கும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து செய்திகளிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், மேலும் குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமி ஆசான தொகுதியான இந்திரா நகர் தொகுதியில் உள்ள தர்மபுரி அரசு பள்ளியில் கூட மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் வழங்கப்படாது வேதனை அளிப்பதாகவும், முதலமைச்சரின் செல்லபிள்ளையான இந்த தொகுதியில் அவர் தொகுதியைச் சேர்ந்த பள்ளிகளையே அவர் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டிய அவர், முதற்கட்டமாக தருமபுரியில் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்களை தொடர்ந்து புறக்கணித்து வஞ்சித்து வரும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தவர் பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

    சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் சுவரொட்டியை அச்சடித்த நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....