Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஷ்யாவில் வெளியான புஷ்பா..அங்கும் சாதனை தொடருமா?

    ரஷ்யாவில் வெளியான புஷ்பா..அங்கும் சாதனை தொடருமா?

    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் இன்று ரஷ்யாவில் வெளிவந்துள்ளது.

    கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம்தான், புஷ்பா. தெலுங்கில் உருவானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. 

    புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு தெலுங்கு உலகின் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்தார். 

    அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழு செய்த விளம்பரத்தால், புஷ்பா திரைப்படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் இந்தியா முழுவதும் ரீங்கரிக்கத் தொடங்கியது. பட்டித்தொட்டியெங்கும் புஷ்பா திரைப்படத்தைக் கொண்டு சேர்த்த பெருமை முதலில் இத்திரைப்படத்தின் பாடலுக்குத்தான். 

    ‘ஓ சொல்றியா மாமா’ மற்றும் ‘ஶ்ரீ வள்ளி’ பாடல்கள் பலரையும் புஷ்பா திரைப்படத்தைப் பற்றி பேச செய்தது. ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வெளியான சமயத்தில் ஏற்பட்ட பாடல் குறித்த சர்ச்சைகள் புஷ்பா திரைப்படத்துக்கு மிகச்சிறந்த புரோமஷனாகவே அமைந்தது. 

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான புஷ்பா திரைப்படமானது, வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. இந்தியா முழுவதும் பலரையும் கவர்ந்த இத்திரைப்படமானது 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

    இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகமான ‘புஷ்பா- தி ரைஸ்’ ரஷ்யாவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, இன்று புஷ்பா திரைப்படமானது ரஷ்யாவில் ரிலீஸாகியுள்ளது. 

    புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா- தி ரூல்’ தற்போது உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. 

    ‘குந்தவையும், வானதியும் ஆட… ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க… ‘ – பொன்னியின் செல்வன் வெளியிட்ட வீடியோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....