நோபல் பரிசு பெலராஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அலஸ் பியாலியாட்ஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. இந்த பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலராஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அலஸ் பியாலியாட்ஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அலஸ் பியாலியாட்ஸ், ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு உதவியாக இவர் பல உதவிகளை செய்து வருகிறார்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; பிஞ்சு குழந்தையை கூட சுட்டு கொன்ற கொடூரர்கள்