வனத்தில் சுற்றிக்காண்பிக்கும் வண்டியில் திடீரென சிங்கம் ஒன்று தாவி உள்ளே குதித்து பயணிகளிடம் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டு விலங்குகள் மட்டுமல்ல; காட்டு விலங்குகளும் தற்போது மனிதர்களிடம் உறவாடி பிரிக்க முடியாத அன்பினை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளியில், வனத்தை சுற்றிக்காண்பிக்கும் வண்டியில் எங்கிருந்தோ ஓடிவந்த சிங்கம் ஒன்று வண்டிக்கு உள்ளே தாவிக் குதித்தது. வண்டியில் தாவிய சிங்கம், முன் பக்கமாக அமர்ந்திருக்கும் பயணி முதல் பின்புறமாக அமர்ந்திருக்கும் பயணி வரை அனைத்து சுற்றுலா பயணிகளிடமும் செல்லத் துடிக்கிறது. அதே சமயம், அந்த சுற்றுலா பயணிகளும் அந்த சிங்கத்தை தடவிக் கொடுக்கின்றனர்.
New wildlife experience 😬 pic.twitter.com/1J74oTKgWW
— OddIy Terrifying (@OTerrifying) November 8, 2022
சிங்கம் காட்டு விலங்கு எனினும் அந்த சுற்றுலா பயணிகளை அது எதுவுமே செய்யவில்லை. தற்போது இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் அதிகமாக பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இந்தச் சம்பவம் நடந்த இடம் தெரியவில்லை.
இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்