இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், இந்திய அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஹர்திக் பாண்டியாவிற்கு முதல் முறையாக கேப்டன் பதவி வழங்கப்பட்டபோதே ஐபிஎல் கோப்பையை வென்று காண்பித்துள்ளார். ஆதலால், இந்திய இருந்து ஓவர் அணியின் அடுத்த கேப்டனாக பாண்டியாவைக் குறித்து வைத்திருப்பார்கள்.
மேலும், வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா இருப்பார். கூடவே சிலர் ஓய்வும் பெறுவார்கள். என்ன நடக்கும் எனத் தெரியாது. அதைப் பற்றி வீரர்கள் தீவிரமாகச் சிந்திப்பார்கள். இந்திய அணியில் பல வீரர்கள் 30-களின் மத்தியில் உள்ளார்கள். இந்திய அணியில் அவர்களுக்கான இடம் பற்றி மறுபரிசீலனை செய்வார்கள்.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனது கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்த கமல் நடத்திய போட்டோ ஷூட் – வைரல் புகைப்படங்கள்