Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைரெட் அலட்டுக்கு மேல் சீர்காழியில் இரண்டு மடங்கு மழை! இந்த நூற்றாண்டின் உச்சம் என வானிலை...

    ரெட் அலட்டுக்கு மேல் சீர்காழியில் இரண்டு மடங்கு மழை! இந்த நூற்றாண்டின் உச்சம் என வானிலை மையம் தகவல்

    கடந்த 1-ஆம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு இயல்பை விட 15 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், “தென்மேற்கே வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களை மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதிக கனமழையும், 14 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

    அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12,13 தேதிகளில் பரவலாகவும், 14 ,15ல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கனமழையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை ஒரு இடங்களில் கனமழை மிக கனமழையும், சென்னை முதல் கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    மீனவர்களை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வடதமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு40முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடகிழக்க பருவமழையை பொருத்தவரை கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழக மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு இயல்பை விட 15 சதவீதம் அதிகமாக உள்ளது” என கூறினார்.

    இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....