குட்டி யானை ஒன்று தனது உரிமையாளர் மீது பாய்ந்து அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் பார்ப்பதற்கு பெரியதாக தோன்றினாலும், அவை அதிகமாக குறும்புத்தனமான செயல்களை செய்து நம்மை கவர்கின்றன. அவ்வப்போது குட்டி யானைகளின் காணொளிகள் வைரலாவது உண்டு. குறிப்பாக குட்டி யானைகளின் சேட்டைகள் செய்வது வழக்கம். அதுவும் தனக்கு பிடித்த உரிமையாளர் என்றால் சற்றே அதிகம் தான்.
அந்த வகையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், குட்டி யானை தனது உரிமையாளர் மீது மிகுந்த பாசத்துடன் புரள்கின்றனது. பிறகு, அவருடன் கொஞ்சி விளையாடுவது போல், புரண்டு புரண்டு விளையாடுகிறது. அப்போது உரிமையாளர் தன்னை தப்புவித்துக்கொள்ள அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்.
இந்தக் காணொளி தற்போது பலராலும் பார்க்கப்பட்டு வருவதோடு, வேடிக்கையான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இதையும் படிங்க: ‘லவ் டுடே வின் வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது’ – பிரபல இயக்குநர் புகழாரம்!