Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'லவ் டுடே வின் வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது' - பிரபல இயக்குநர் புகழாரம்!

    ‘லவ் டுடே வின் வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது’ – பிரபல இயக்குநர் புகழாரம்!

    பிரபல இயக்குநர் வசந்தபாலன், ‘லவ் டுடே’ திரைப்படம் குறித்து பேசியுள்ளார். 

    கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம்தான், லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே சக்கை போடு போட்டு வருகிறது. பெருமளவு வசூல் வேட்டையையும் இத்திரைப்படம் நிகழ்த்தி வருகிறது. 

    இந்நிலையில், பல திரைப்பிரபலங்களும் லவ் டுடே திரைப்படம் குறித்த தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன்  போன்ற திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் லவ் டுடே திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார். 

    இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளதாவது; 

    கோவிட் தொற்றுக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கிறார்கள் பார்ப்பார்கள் என்கிற மாயை நிலவி வந்தது.மாயை அல்ல உண்மை என்ற நிலமையிருந்தது.

    சின்ன படங்களை மக்கள் ஓடிடி யில் பார்த்து கொள்வார்கள் என்று உறுதியாக சொல்கிற பெரும்திரளும் உரையாடலும் திரையுலகம் முழுக்க நிகழ்ந்தவண்ணம் இருந்தது. அதை உறுதிபடுத்தும் வண்ணம் பெரிய படங்களின் வெற்றியும் சிறிய படங்களின் சரிவும் அந்த கணக்கிற்கு ஏற்றவாறு நிகழ்ந்தது. போன ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றி ஓரளவிற்கு நம்பிக்கையைத் தந்தது.

    ஆனாலும் பெரிய படங்கள், பெரிய நடிகர்கள், நட்சத்திர பட்டாளம் என்பதே தொடர்ந்த தகவல்களாக அமைந்தது.நிலமையை அனைவர் மனதிலும்  நிறுவியது. இந்த நிலையில் லவ் டுடே வின் வெற்றி புதுமுக நடிகரின் படமும் திரையரங்கில் பெரியதாக வெற்றி பெறும் என்கிற பெரும் நம்பிக்கையை பொதுவில் விதைத்துள்ளது. அநீதி திரைப்படத்திற்கான பெரும் நம்பிக்கையை தூவியுள்ளது.

    லவ் டுடே இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் அவர்களுக்கும் படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார். 

    வசந்தபாலன் தற்போது அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் அநீதி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்ககால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை வாங்கிய பெற்றோர்..இன்று மாலை இறுதிச்சடங்கு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....