Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை! ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த நடிகை குஷ்பு

    தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை! ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த நடிகை குஷ்பு

    தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு என்பது இல்லை என நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

    சென்னை, அடையாறில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, 

    திமுக தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்று கூறியதாகவும், ஆனால், இப்போது என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியதோடு, மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிப்பதாகவும், பால் விலை உயர்வு வயிறு எரிவதாகவும், சொத்து வரி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும் தமிழக முதலவர் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய குஷ்பு, திமுக அரசு மக்களை பற்றி கவலைக்கொள்ளாத ஒரு அரசாங்கம் எனவும் விமர்சித்தார். 

    தொடர்ந்து பேசிய குஷ்பு, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெண்கள் பல வகைகளில் ஆட்சியாளர்களாலும் அமைச்சர்களாலும் அவமானப்படுத்தப்படுவதாகவும், பெண்கள் இழிவுப்படுத்துவதை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் மனநிலை தான் திமுக அமைச்சர்களின் நிலை; அதனை யாரும் தட்டிக் கேட்க கூட முன்வரவில்லை என்றும் கூறினார். 

    திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே ஜிஎஸ்டி இருந்து வருகிறது. அனால் இப்போது திமுக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உஅயர்வு உள்ளிட்டவைகளை செய்துவிட்டு மத்திய அரசின் மீது பழி சுமத்துகிறார்கள். மக்கள் இதனைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என குஷ்பு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.  

    இதையும் படிங்க: தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....