Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்...ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறையாம்!

    மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்…ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறையாம்!

    மராட்டிய மாநிலத்தில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 9.26 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. 

    இச்சம்பவம் குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவிக்கையில், தரையில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், கோலாப்பூரில் இருந்து 81 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. 

    இதுவரையில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் இந்த வாரம் மட்டும் பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், கோலாப்பூர் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கஅதிகரித்து வரும் அம்மை நோய்: இருவர் உயிரிழப்பு..! 126 குழந்தைகள் பாதிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....