வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் வளர்க்கப்படுவை பூனைகள் தான். இந்த பூனைகள் குறித்து நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்:
- பூனைகள் தங்கள் உள்ளங்கால்கள் மூலம் வியர்வையை வெளியேற்றுகின்றன. மனிதர்களை போல தோல் வழியாக அவைகளால் வியர்வையை வெளியேற்ற இயலாது.
- கடல் நீரில் உள்ள உப்பை சுத்திகரிக்கும் அளவிற்கு பூனைகளின் சிறுநீரகங்களுக்கு தன்மை உண்டு. இதனால், அவைகளுக்கு உப்பு தண்ணீர் பிரச்சனையே ஏற்படாது.
- உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.
- நமக்கு எப்படி இடது, வலது கை இருப்பது போல பெண் பூனைகளுக்கு வலது கால் பழக்கமும், ஆண் பூனைகளுக்கு இடது கால் பழக்கமும் உள்ளன.
- பூனைகளின் சிறுநீருக்கு இருட்டில் ஒளிரும் தன்மை உண்டு. இதனைக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தை பூனை சரியாக கணித்துக் கொள்ளும்.
- பூனைகளினால் நாக்கிற்கு இனிப்பு சுவையை உணரும் தன்மை கிடையாது என்பது கூடுதல் தகவல்.
- பெரும்பாலான பூனைகள் அவைகளின் வாழ்நாளில் 80 சதவீதம் தூக்கத்தில்தான் செலவிடுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- வெளிநாடுகளில் பூனைகளை இராணுவத்தில் உபயோகபடுத்தவும் செய்கின்றனர்.
இதையும் தெரிஞ்சுக்கோங்க; துளசி இலைகளின் பயன்கள் தெரியுமா? இதை படியுங்கள்; இப்படி செய்து பாருங்கள்!
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.