Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்பெண்களை தாக்கும் அபாயகரமான நோய்கள், கவனமாக இருங்கள்!

    பெண்களை தாக்கும் அபாயகரமான நோய்கள், கவனமாக இருங்கள்!

    • மாதவிடாய் காலங்களில் அதிக இரத்த போக்கு, கடுமையான வலி போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும். இதனால், கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த இரண்டு வகை புற்று நோய்களும் ஒரே மாதிரியான வலியைத் தான் ஏற்படுத்தும்.
    • ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை பலவீனப்படுத்தும் நோயாகும். இது எலும்புகளை எளிதில் பலவீனமடையச் செய்யும். அதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட எலும்புகள் உடைந்து விடும். இந்த ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கு வயது, மது அருந்துவது, சில மருந்துகளை உட்கொள்வது, மரபியல் சார்பு, ஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாடு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவையும் காரணமாகிறது.
    • பெண்கள் பகல் நேரங்களில் சிறுநீர் கழித்தலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதே இரவு நேரங்களில் அடிக்கடி சிறு நீர் வெளியேறுகிறது என்றால் அது ஆபத்து. அது தூக்கத்தினை பாதிக்கிறது. மேலும், இந்த அறிகுறிகள் நுரையீரல் மற்றும் இதயத்தில் நோய்கள் இருப்பதற்கான காரணமாக கூட இருக்கலாம்.
    • மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறினால் அதை சீரியஸாக எடுத்து கொள்வது அவசியம். குறிப்பாக, அல்சர் அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
    • பெண்ணுறுப்பில் அடிக்கடி துர்நாற்றம் ஏற்படுவது புற்று நோய் காரணமாக கூட இருக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வெறும் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
    • இன்றைய காலகட்டத்தில் அனைத்து பெண்களும் சந்திக்கும் பெரும் பிரச்சனை கர்ப்பப்பை நீர்க்கட்டிகள். பத்தில் 8 பெண்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
    • சிலருக்கு இதனுடன் தைராய்டு பிரச்சனைகளும் சேர்ந்து கொள்கிறது. இதனால், பெண்கள் கருத்தரிப்பதில் மிக பெரிய சிக்கல் ஏற்படுகிறது. சரியான மருத்துவரை அணுகி முறையான மருத்துவம் மேற்கொண்டால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
    • தினமும் 30 நிமிடங்கள் உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியை செய்து உங்கள் எடையை பராமரித்து கொள்ளுங்கள்.பெண்களுக்கு உடல் எடை கூடுதல் மற்றும் அதிக சோர்வு ஏற்படுவது என்பது மெனோபாஸ் ஏற்படுவதன் அறிகுறிகளில் ஒன்று. இந்த காலகட்டங்களில் பெண்கள் மன அழுத்தம் இன்றி இருப்பது நல்லது. முடிந்த அளவு யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
    • பெண்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கும் மற்றொரு நோய், மார்பக புற்றுநோய். இந்த நோய் பாதிக்கும் ஆரம்ப காலத்திலே கவனமாக செயல்பட்டு சிகிச்சை மேற்கொண்டால், இந்த மார்பக புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். வயது, பரம்பரை தொற்று, உடல்பருமன் அதிகரித்தல், குடிப்பழக்கம் என சில காரணிகளால் இந்த நோய் பெண்களை அதிகம் பாதிக்கின்றது.

    இதையும் படிங்க; நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: அரசியல் காரணிகளும் உள்ளனவா? காவல்துறை தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....