நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை முன்னாள் எம்.பி ஆஷூ மாரசிங்க தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
இலங்கை முன்னாள் எம்.பி. ஆஷூ மாரசிங்க. இவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தார். இந்நிலையில், இவர் தன் காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழ, இந்த விவகாரம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி ஆஷூ மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரன்தனா, தனது நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக அவரின் மீது புகார் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் எம்.பி ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா இருவரும் ஆஷூ மாரசிங்க மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் ஹிருணிகா இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என புலனாய்வு அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே தனது மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஆஷூ மாரசிங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், நாயை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான காணொளியும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி போலியானது என ஆஷூ மாரசிங்கவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா இருவரும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சில மணி நேரங்கள் முன்புதான் ஆஷூ மாரசிங்க ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பற்கள் காரணமாக பறிபோன அரசு வேலை; கேரளாவில் எழுந்த விவாதம்