Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிவில்லியனூரில் தரமற்ற குடிநீர்; தலைமைப் பொறியாளர் அளித்த உறுதி..

    வில்லியனூரில் தரமற்ற குடிநீர்; தலைமைப் பொறியாளர் அளித்த உறுதி..

    ரூ. 50 கோடி மதிப்பீட்டில் வில்லியனூர் தொகுதியில் குடிநீர் மேம்பாட்டு பணி விரைவில் தொடக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடந்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் உறுதியளித்துள்ளார்.

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியபேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தரமற்று வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவாவுக்கு புகார் வந்தது. 

    மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் தொய்வு, பல்வேறு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது, புதிய போர்வெல் அமைப்பது, எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை எரிய வைப்பது, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று காலை ஆலோசனை நடத்தினார். 

    இக்கூட்டத்தில், வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேட்டையில் ஏஎப்டி குடிநீர் திட்டப் பணியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைப்பது, சுல்தான்பேட்டை, வில்லியனூர், கொம்பாக்கம், ஜி.என். பாளையம், திரிவேணி நகர், ஒட்டாம்பாளையம் வெங்கடேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய வேர்வெல் அமைப்பது, தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் ரூ. 50 கோடி மதிப்பில் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த தலைமைப் பொறியாளர், பழுதடைந்துள்ள குடிநீர் தொட்டிகளை உடனடியாக பராமரிக்க வேண்டும், சுல்தான்பேட்டை, வில்லியனூர் பத்மினி நகர், கொம்பாக்கம்பேட் ஆகிய மூன்று இடங்களில் உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குடிநீர் சுகாதாரமற்று வரும் உத்திரவாகினிப்பேட் பகுதியில் உடனடியாக ஒரு போர்வெல் அமைத்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கவும், நெடுஞ்சாலைகளில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும், வில்லியனூர் தொகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்வது, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை மேம்படுத்துவது, இருபுறமும் மின் விளக்கு, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில், கண்காணிப்புப் பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன் (பொது சுகாதாரக் கோட்டம்), ராதாகிருஷ்ணன் (நீர்பாசனக் கோட்டம்), உதவிப் பொறியாளர்கள் வாசு, சீனுவாசன், கோபி, மதி, சேகர், இளநிலைப் பொறியாளர்கள் திருவேங்கடம், சங்கர், ஞானவேல் மற்றும் வில்லியனூர் தொகுதி திமுக செயலாளர் இராமசாமி, விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, இளைஞர் அணி தொகுதி செயலாளர் மணிகண்டன், இரமணன், கொம்பாக்கம் ஜெகன், ஜெனா, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்பற்கள் காரணமாக பறிபோன அரசு வேலை; கேரளாவில் எழுந்த விவாதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....