Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமாயமான மாணவர்கள்; கரை ஒதுங்கிய உடல்...

    மாயமான மாணவர்கள்; கரை ஒதுங்கிய உடல்…

    புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் அருகே கடலில் நண்பர்களுடன் குளித்த போது மாயமான புதுச்சேரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

    புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் தீபன். இவருக்கு வயது 16, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் சண்முகம் இவருக்கு வயது 16 இருவரும் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். 

    நேற்று தீபன் மற்றும் சண்முகம் இருவரும் தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடியில் கடல் பகுதியில் ஆறு பேரும் குளித்து வந்த நிலையில் சண்முகம் மற்றும் தீபன் இருவரும் ராட்சத கடல் நிலையில் அடித்துச் செல்லப்பட்டனர். 

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் மாணவர்களின் உடலை தேடினர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    இந்நிலையில், தீபன் என்ற மாணவனின் உடல் கோட்டக்குப்பம் அருகே உள்ள நடுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    கரை ஒதுக்கிய மாணவன் தீபனின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மற்றொரு மாணவனின் உடலை மீனவர்கள் உதவியுடன் போலீசார் அப்பகுதியில் தேடி வருகின்றனர்.

    மதுபாட்டில்கள் பதுக்கல்; கையும் களவுமாய் சிக்கிய இருவர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....