இலங்கையில் டயலாக் தொலைபேசி 3ஜி இணைய சேவையை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசி சேவையாக டயலாக் உள்ளது. இந்நிலையில், 4 ஜி இணைய சேவையை அதிகரிக்கும் நோக்குடன் அந்நிறுவனத்தின் 3 ஜி சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை வருகிற புது வருடம் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தத் தீர்மானம் வாடிக்கையாளகர்ளுக்கு சிறந்த 4 ஜி சேவையை வழங்கும் நோக்கிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக டயலாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டயலாக் 3 ஜி இணைய சேவையை ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களே இப்போது பயன்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3 ஜி சேவையை நிறுத்தி அதற்கு பதிலாக 4 ஜி சேவையை உயர் தொழிநுட்பத்தில் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 3 ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4 ஜி சேவைக்கு மாற்றுமாறும் அந்நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
வினாடிக்கு 250 கனஅடி நீரை பெரும் செம்பரம்பாக்கம் ஏரி.. திறக்கப்பட்ட பூண்டி..