தமிழக பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. வருகிற 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
இதன்படி பள்ளி கல்வி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆரம்பப் பள்ளி ஆசிரியகுரலுக்கு பயிற்சி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதி முதலே பள்ளிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 2 ஆம் தேதியே பள்ளிகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படம்…