Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபழுதடைந்தவைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்; மக்களை கவர்ந்த ஓவிய ஆசிரியர்..

    பழுதடைந்தவைகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்; மக்களை கவர்ந்த ஓவிய ஆசிரியர்..

    புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ள கிறிஸ்துமஸ் குடில், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்கள் ஆண்டுதோறும் தங்கள் இல்லங்களில் குடில் அமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தனது வீட்டில் வித்தியாசமான முறையில்  இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த மின்னணு கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

    இந்து மதத்தினை பின்பற்றி வரும் ஓவிய ஆசியரான சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன்பு காய்கறிகளை பயன்படுத்தியும், 1 செமீ கிறிஸ்துமஸ் குடில்கள் செய்தும் பார்வையாளர்களை ஈர்த்தார். அதே போல் 1000 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் செய்திருந்தார். அதேபோல் தேங்காய் மற்றும் தென்னை பொருட்களை கொண்டும், புத்தகங்களை கொண்டும்,  எண்ணையால் செய்யப்பட்ட திண்பண்டங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்களை செய்திருந்தார். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் செய்து அசத்தியிருந்தார். 

    இதைத்தொடர்ந்து, 10-வது வருடமாக இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில், டிஜிட்டல் இந்தியாவை வரவேற்கும் வகையிலும், மின்னணு பயன்பாட்டில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த மின்னணு கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார், ஓவிய ஆசிரியரான சுந்தரராசு. 

    அவர் அமைத்துள்ள குடிலில் கிறிஸ்துமஸ் தாத்தா காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கையில் மொபைல் போனை பார்ப்பது போன்றும், அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தியதால் கண் கண்ணாடி அணிந்துக்கொண்டு இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். மேலும், கம்யூட்டர் மற்றும் பழைய மாடல் மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவமாக அமைத்து அதில் குழந்தை ஏசு பிறப்பது போன்ற மாட்டு தொழுவமும், அருகில் மாதா, மற்றும் பலர் இருப்பது போலவும் அமைத்து அசத்தியுள்ளார். 

    மேலும், ஹார்ட்டிஸ்க், கேமரா, பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி. மானிட்டர், லேப்டாப், மதர் போர்டுகளை கொண்டு டவுன் சிட்டி பில்டிங் மாரியும், சிடிக்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தையும் வடிவமைத்து அசத்தியுள்ளார். 

    இதைத்தொடர்ந்து, பிரிண்டர் மிஷினை கொண்டு ராணுவ தளம் மாதிரியும் உருவாக்கப்பட்ட அதில் ஏரோபிலேன் போன்றவையும் வைத்துள்ளார். மேலும் எலக்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலை சுற்றி அழகுப்படுத்தியுள்ளார். கம்ப்யூட்டர் மற்றும் மின்னனு கழிவு பொருட்களாளான குடிலை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 

    sundar rasu

    இதுகுறித்து கூறிய ஓவிய ஆசிரியர் சுந்தரராசு , தற்போதைய காலத்தில் மின்ன்னு பயன்பாடு அதிகம் அளவில் உள்ளதாகவும், எதையும் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்றும், செல்போனை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சென்னை அணிக்கு வந்த ஸ்டோக்ஸ்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....