Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணிக்கு வந்த ஸ்டோக்ஸ்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    சென்னை அணிக்கு வந்த ஸ்டோக்ஸ்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றனர். 

    இந்நிலையில், வருகிற ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது இன்று கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது.  இந்த ஏலத்தில் பல அணிகள் பலத்த போட்டியிட்டு வருகின்றன. 

    குறிப்பாக, பிராவோ இல்லாத காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வேகப்பந்து வீச்சாளரை குறிவைத்தனர். அதனடிப்படையில் சாம் கரனை ஏலமெடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்றது. ஆனால், அது நடைபெறவில்லை. சாம் கரனை பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு வாங்கியது. 

    இதைத்தொடர்ந்து, கடும் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கி வரும் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு வந்துள்ளது, சென்னைக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக, மகேந்திர சிங் தோனி புனே அணிக்காக விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி.. காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....