Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி.. காரணம் என்ன?

    நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி.. காரணம் என்ன?

    பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் முறை குறித்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளமானது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. 

    அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், திரைப்படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வருகிறது. உலகெங்கும் கோடிக்கணக்கில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தை மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்த தளத்திற்கென பலகோடி ரசிகர்கள் உள்ளனர். 

    கொரோனா காலக்கட்டத்திலிருந்து ஓடிடி தளங்கள் பெருமளவில் வளர்ச்சியை சந்தித்தன. உலகச் சந்தையில் நெட்ஃபிளிக்ஸ் தனது காலடித்தடத்தை வலுவாகவே படைத்தது என்று சொல்லலாம். 

    இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் இனி பாஸ்வேர்டைப் பிறருடன் பகிரமுடியாது என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வைரலானது. 

    பொதுவாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தை ஒருவர் ரீசார்ஜ் செய்துவிட்டு, அதன் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்துகொள்வர். இதன்மூலம், மற்றவர்களும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை உபயோகிப்பர்.

    ஆனால், வெளிவந்த தகவலின்படி, நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களது பாஸ்வேர்டை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பகிர வேண்டுமென்றால், அதற்காக இணை கணக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்றும் தகவல்கள் உலவின. 

    இச்சூழலில், இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளிப்படையாக தகவல் தெரிவித்துள்ளது. 

    அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

    ஒரு நெட்ஃபிளிக்ஸ் கணக்கு இருந்தால், அதனை ஐந்து பேர் பயன்படுத்தும் வாய்ப்பு தற்போது உள்ளது. 

    பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் முறையால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவது உண்மைதான். ஆனால், அதனை தடை செய்வது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இருப்பனும், நிறுவனத்தின் வருவாய் வெகுவாகக் குறைந்திருப்பதால், அந்த முடிவை விரைவாக எடுக்க நிர்வாகத் தலைமை விரும்புகிறது. 

    இதனின் ஒரு அங்கமாக, சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் இந்த பாஸ்வோர்டு பகிர்வுக்குத் தடை விதிக்கப்பட்டு, அவ்வாறு பகிரும் பயனாளர்களுக்கு ரூ.250 வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    மேலும், இதற்காக. ஐ.பி. முகவரி, சோதனை ஐ.டி. கணக்கு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பிரபல நடிகர் மரணம்; திரையுலகினர் ரசிகர்கள் இரங்கல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....