தான் யார் பக்கமும் இல்லை என்றும் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுவதாகும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், வி.கே. சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். மேலும், அங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு புத்தாடைகள், கேக் உள்ளவவற்றை கொடுத்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் யார் பக்கமும் இல்லை என்றும் அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுவதாகவும், தான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் என்றும் கூறினார்.
மேலும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியைத் தான் தொடங்கிவிட்டதாகவும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைப்பதாகவும், தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும் என்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் கூறியதாகவும் சசிகலா தெரிவித்தார்.
மார்கழி மாதத்தில் வந்துதித்த ஒரு மாதவம்! – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!