சென்னை: உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள்; தேசிய உழவர்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 22 ஆண்டுகளாக முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளையே விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்நிலையில், இந்த நாளில் உழவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். தேசிய உழவர்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
சுயவிளம்பரம் தேடுகிறதா எடப்பாடி பழனிசாமி அணி? – ஓம்சக்தி சேகர் பதிவு
உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். #தேசியஉழவர்நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 23, 2022