Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சுயவிளம்பரம் தேடுகிறதா எடப்பாடி பழனிசாமி அணி? - ஓம்சக்தி சேகர் பதிவு

    சுயவிளம்பரம் தேடுகிறதா எடப்பாடி பழனிசாமி அணி? – ஓம்சக்தி சேகர் பதிவு

    பொதுமக்களை இன்னல்களுக்கு உண்டாக்கி நடத்தும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது என அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியில் 28-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு என்பது தனி நபர் விளம்பரம் தேடும் ஒரு முயற்சி என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் உண்மையான அதிமுக துணை போகாது என்றும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    மாநில அந்தஸ்து என்பது புதுவை மாநிலத்திற்கு மிக முக்கியமானது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. மாநிலமாக புதுவை மண்ணை நேசிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு. 

    ஆனால் அதற்காக புதுவை மக்கள் அவதிக்குள்ளாகி முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் அதுவும் புத்தாண்டு,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் குறிப்பாக வியாபார மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் போராட்டம் நடத்துவது என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் கொள்கைக்கு எதிரானது.

    ஏனெனில் மக்களுக்காக தான் அஇஅதிமுக எனும் இயக்கத்தை புரட்சித்தலைவரும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் கட்டிக் காத்து வருகின்றனர். 

    மாநில அந்தஸ்து சம்பந்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது போன்ற சுய விளம்பர போராட்டங்கள் முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துவிடும்.

    மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்களின் ஆதரவோடு வலியுறுத்தினால் மட்டுமே மாநில அந்தஸ்து என்பது சாத்தியமாகும். 

    மாறாக பொதுமக்களை இன்னல்களுக்கு உண்டாக்கி நடத்தும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது. புதுச்சேரியில் உள்ள உண்மையான புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிவந்த எந்த ஒரு கழக தொண்டனும் இது போன்ற சுய விளம்பர போராட்டங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

    எனவே மாநில அந்தஸ்துக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கூறினார்.

    புதுச்சேரியில் முழு கடையடைப்பு; போராட்டத்தை முன்னெடுக்கும் அதிமுக..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....