Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் முழு கடையடைப்பு; போராட்டத்தை முன்னெடுக்கும் அதிமுக..

    புதுச்சேரியில் முழு கடையடைப்பு; போராட்டத்தை முன்னெடுக்கும் அதிமுக..

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 28-ஆம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். பிரெஞ்சு நிர்வாகத்த்தின் கீழ் இருந்து இந்திய அரசு புதுச்சேரி சட்டமன்றம் உள்ளிட்ட மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது. 

    நேரு பிரதமராக இருந்த போது 1963-ல் யூனியன் பிரதேச சட்ட விதிகள் அமைக்கப்பட்ட போது புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டவிதிகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, புதுச்சேரி நிர்வகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநர் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது.

    மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்த போது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தபோது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்ததால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

    துணைநிலை ஆளுநர், முதலமைச்சருக்கு தொடர்ந்து எதிர்மறையான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்பட்டது. இதையெல்லலாம் மனதில் வைத்துதான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற ஒரு முடிவினை 1998-ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அதை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கொள்கை முடிவு அறிவித்தார்கள். அதன்பின்பு வந்த ஆட்சி மாற்றத்தால் மாநில அந்தஸ்து கைவிடப்பட்டது. 

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களும் தொடர்ந்து பல பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முன்மொழிந்தார்.

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்தாலும் துணைநிலை ஆளுநருடனான கருத்து வேறுபாட்டால் தேர்தல் கால அறிவிப்புகளை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    மாநில அரசின் சொந்த வருவாயில் புதுச்சேரி செயல்பட்டு வரும் நிலையில் மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அந்துஸ்து வழங்க விருப்பமில்லாத சூழல் உள்ளது.

    புதுச்சேரி மாநில மக்கள் நலன்கருதி மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழிவகை செய்யவும் மாநில அந்தஸ்து தேவை என்பதை அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது. பல்வேறு அமைப்புகள் மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசு வலியுறுத்தி தமிழக முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார் அனுமதியோடு வருகின 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். 

    இந்த முழு அடைப்புக்கு அனைத்து அமைப்புகள், கட்சிகள், பேருந்து உரிமையாளர்கள், வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த முழு அடிப்படை போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நடைபெறும்.

    இவ்வாறு கூறினார்.

    ஏன் யூனியன் பிரதேசங்கள்? மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் என்ன வேறுபாடு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....