குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்( ஊரக வளர்ச்சித்துறை) உள்ளிட்ட 92 காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு https://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 22) கடைசி நாள் என்றும் இதன்பிறகு அந்த சேவை முற்றிலும் நிறுத்தப்டும் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையில் வேலை விண்ணப்பிக்க முந்துங்கள்!