தமிழ்த் திரைப்பட உலகை உலகளவில் கவனம் பெற செய்திருக்கிறார், நடிகர் சூர்யா.
தமிழ்த் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் மிக முக்கியமானவர் சூர்யா. நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக சூர்யா அறிமுகமானார். தொடர்ந்து தனது உழைப்பால் தமிழ்த் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரம் என்ற நிலைக்கு வந்துள்ளார்.
சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகளவில் மாபெரும் வரவேற்பை சூர்யா பெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் குழுவில் கலை மற்றும் அறிவியல் பிரிவின் கீழ் உறுப்பினராக இணையுமாறு ஆஸ்கர் விருது குழுவானது சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சூர்யா, இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் தனது நன்றிகளை கூறியுள்ளார். அதில், அழைப்பு விடுத்தமைக்கு ஆஸ்கர் விருது குழவிற்கு நன்றி என்றும், இந்த அழைப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், என்னைத் தொடர்ந்து வாழ்த்தி வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார்.
Thank you @TheAcademy for the invitation, which I humbly accept. My heartfelt thanks to all those who wished me, will always strive to make you all proud!! 🙏🏽 https://t.co/eyEK9hQxhF
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
இதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை