Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்பலரையும் உருக வைத்த 8 வயது சிறுமியின் கடிதம்!

    பலரையும் உருக வைத்த 8 வயது சிறுமியின் கடிதம்!

    இங்கிலாந்தில் தனது தாய்-தந்தையின் கடனை அடைக்க பணம் அனுப்புமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 8 வயது சிறுமி கடிதம் எழுதி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    மீட்பர் என்று அழைக்கப்படும் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வார்கள். இது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    பொதுவாக சிறுவர்கள் எழுதும் கடிதத்தில் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொம்மையையோ அல்லது சாக்லெட்டுகளையோ அல்லது பிடித்த பொருளையோ தான் கேட்பது வழக்கம். 

    ஆனால், இவற்றுக்கு மாறாக, இங்கிலாந்தில் வசிக்கும் எம்மி என்ற 8 வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. 

    எம்மி, தனது தாய்-தந்தையின் கடனை அடைக்க பணம் அனுப்புமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு சிறுவர்கள் எழுதும் கடிதத்தில் எப்போதும் விளையாட்டாக கேட்பார்கள். இந்நிலையில் சிறுமி தனது தாய் தந்தைக்காக இப்படி உதவி கேட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    வாடகைக்கு வீடு எடுத்து விபசாரமா? தெரிந்தே மாட்டிக்கொண்ட வங்கி மேலாளர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....