Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு....19 மாணவர்கள் பலி!

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு….19 மாணவர்கள் பலி!

    ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இன்று நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

    இன்று காலை 7.30 மணியளவில் காபூலில் உள்ள காஜ் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்கு சென்றுக்கொண்டிருந்த பொழுதில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும், இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    இந்த தாக்குதலில் 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 27 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், கல்வி மையம் மற்றும் மருத்துவமனைகளில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர். 

    இதுவரையில் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

    இதையும் படிங்க: உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம்; சிட்டாக பறந்து சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....