Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் பொன்முடி பெண் வயிற்றில் 'ஓசி'யில் பிறந்தவர்தான் - நடிகை கஸ்துாரி காட்டம்

    அமைச்சர் பொன்முடி பெண் வயிற்றில் ‘ஓசி’யில் பிறந்தவர்தான் – நடிகை கஸ்துாரி காட்டம்

    “’ஓசி பஸ்’ என பெண்களைக் கூறும் அமைச்சர் பொன்முடி, பெண் வயிற்றில் ஓசியில் பிறந்தவர் தான்” என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

    தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்ற நடிகை கஸ்தூரி, மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மேயர் ராமநாதன், கமிஷனர் சரவணகுமார் ஆகியோரை சந்தித்து அவர்களை பாராட்டினார். 

    அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் நல்ல திட்டம். அரசு, எந்த திட்டத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. ‘ஓசி பஸ்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அதை விட மிகப் பெரிய தவறு.

    அமைச்சர் பொன்முடி, அப்படி பேசியதை நியாயப்படுத்த முடியாது. ‘ஓசி பஸ்’ என பெண்களை கூறும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும், பெண் வயிற்றில், ‘ஓசி’யில் பிறந்தவர்கள் தான். பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான், அமைச்சர்கள் பேச வேண்டும்.

    இவ்வாறு, அவர் பேசினார்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் ஆகியோர் அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘ஊழல் வெளிச்சம் தான் திமுக அரசுக்கு விடியல் போல’-அண்ணாமலை குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....