கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு இந்திய வானிலை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் ஒரு சில வட மாநிலங்களின் மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட மாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்ஸியஸ் ஆக பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானின் சுரு பகுதியில் ஒரு டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் 0.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
தலைநகர் தில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. மேலும் பஞ்சாப் மாவட்டத்தின் அமிர்தரஸ் பகுதியில் 5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் சுமார் 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி உள்ளன. இதன் காரணமாக எப்போதும் இருப்பதை விட குளிர் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
‘மெரினாவில் ஜல்லிக்கட்டு’ – அனுமதி கோரியுள்ள கமல்ஹாசன்