கேரளாவில் காரில் சாய்ந்ததற்காக அதன் உரிமையாளர் 6 வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் காணொளி காட்சிகளாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் தனது காரில் சாய்ந்ததாக சொல்லி 6-வயது சிறுவனை அந்தக் காரின் உரிமையாளர் எட்டி உதைக்கும் காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்காரர் என்பது தெரியவந்தது. அவர் பெயர் முகமது ஷேஜாத் ஆகும். இந்நிலையில், அவர் அந்தச் சிறுவனை தனது காரில் சாய்ந்ததாக கூறி ஆத்திரமடைந்து தாக்கியுள்ளார். அப்போது, பொதுமக்கள் தடுத்தும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து உடனே அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்தச் சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அந்தச் சிறுவன் பெயர் கணேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. காயமடைந்த அந்தச் சிறுவன் கணேஷ் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Mohammad Shihshad from Kerala Kicked a Hindu Boy Ganesh on Chest for leaning to his Car – NDTV didn’t disclose the name of accused.pic.twitter.com/AORXaOGQZu
— Mihir Jha (@MihirkJha) November 4, 2022
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து…