சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி செய்த மூன்று இளைஞர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்து உள்ள புளியம்பட்டியில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட்டது.
வீட்டிலேயே யூடியூப் பார்த்து துப்பாக்கி செய்த சேலம் மாவட்டம், செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ்(25), எருமபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி(25) ஆகியோரும், இவர்களுக்கு உதவி செய்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வசித்த இடத்தில் துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி கைதான மூன்று பேர் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமான உபா பாய்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென வெடித்த டயர்.. படார் என பற்றிய தீ.. சிதம்பரத்தில் பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்