Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

    வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.மனித உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் ரூபாயும்.,கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் 95 ஆயிரம் ரூபாயும்.,வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர்,

    வடகிழக்கு பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்கு பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது. மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது

    வடகிழக்கு பருவமழைக்கு முன், முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான், பொது மக்கள் பாராட்டிற்கு முக்கிய காரணம். இதனால் தான் பாதிப்பு குறைந்துள்ளது
    சென்னையிலும் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

    கடலூர், செங்கல்பட்டு, தேனி உட்பட தமிழகம் முழுவதும் 99 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது.நிவாரண முகாம்களில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிவாரண மையத்தில் மட்டும் மக்கள் உள்ளனர். அதில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர்,
    வடகிழக்கு பருவமடையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும்.

    இதேபோல் கால்நடை உயிரிழப்புக்கு

    பசு,எருமை,ஒன்றிற்கு – 30,000

    செம்மறி ஆடு,ஆடு,பன்றி – 3000 ரூபாய்

    எருது ஒன்றிற்கு – 25,000 ரூபாய்.

    கன்றுக்குட்டி ஒன்றிற்கு – 16,000 ரூபாய்

    கோழி ஒன்றிற்கு – 100 ரூபாய்.

    வீட்டிற்குள் தண்ணீர் சென்றிருந்தால் 4800 ரூபாய்.

    குடிசை முழுமையாக சேதம் – 5000 ரூபாய்,

    குடிசை பகுதியாக சேதம் – 4100 ரூபாய். சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 கிலோ அரிசி.

    வீடு சேதம் – 5,200 ரூபாய்.

    கான்கிரீட் வீடு முழுமையாக சேதம் ஒன்றிற்கு – 95,000 ரூபாய்.

    மலைப்பாங்கான பகுதியில் உள்ள கான்கிரீட் வீடு முழுமையாக சேதம் – 1 லட்சத்து 1,900 ரூபாய்.

    வடகிழக்கு பருவமழையால் தென்னை மரம் விழுந்தால் 18 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்ககடலூரில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....