Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபடிக்க முடியவில்லை என்பதால் தீக்குளித்த புதுக்கோட்டை இளம்பெண்!

    படிக்க முடியவில்லை என்பதால் தீக்குளித்த புதுக்கோட்டை இளம்பெண்!

    பெண் பிள்ளைகளை எப்படியேனும், படிக்க வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பெண்கல்வி மட்டுமே, என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

    ஒரு பெண் கல்வி பயின்றால், சமூதாயத்திற்கே நல்லது. பெண்கள் அனைத்து துறைகளிலும் காலூன்றி நிற்க, கல்வி மட்டுமே தூணாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டும், பெற்றோர்கள் தடையாக நின்றதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில், பெற்றோர் தங்களின் மகளை கல்லூரியில் சேர்க்க மறுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளம்பெண்ணின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டையில் உள்ள மண்டேலா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகளின் பெயர் ஷாலினி (வயது 18). இவர் 12 ஆம் வகுப்பை முடித்து விட்டு, அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாலினி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என ஆசையாக இருந்துள்ளார். தன்னை கல்லூரியில் சேர்க்குமாறு, பெற்றோரிடம் கேட்டுள்ளார் ஷாலினி. தற்போது, குடும்ப சூழ்நிலை மற்றும் பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் சேர்ப்பதாக தனது மகளிடம் கூறியுள்ளனர், பெற்றோர்.

    இருப்பினும், கல்லூரியில் சேர முடியாத காரணத்தால் ஷாலினி மனதளவில் நிம்மதி இழந்து சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில், வீட்டினுள்ளே இருந்த மண்ணெண்ணையை கையில் எடுத்து, உடலில் ஊற்றிக்கொண்டு கண நேரத்தில் தீக்குளித்தார்.

    இதில், பலத்த தீக்காயம் அடைந்துள்ளார் ஷாலினி. பிறகு, குடும்பத்தினர் ஷாலினியை மீட்டு, தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, இளம்பெண் ஷாலினிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் ஷாலினி.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து, புகாரின் அடிப்படையில், கந்தர்வக் கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக, பெற்றோர் மேற்படிப்பில் சேர்க்க மறுத்த காரணத்தால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கந்தர்வக் கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானலில் இவ்வளவு இருக்கா? இப்போ தெரிஞ்சுக்கோங்க; சீக்கிரம் பார்த்துடுங்க!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....