இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த 2 அரசு கல்லூரிகளிலும் இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு (பிஎன்ஒய்எஸ்) 160 இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 – 23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது.
இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ தபால் அல்லது கூரியர் மூலமாக அக்டோபர் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை, சென்னை -106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுவரையில் இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்தப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!